தமிழ்நாடு

காவலாளி தலையில் கல்லை போட்டு கொல்ல முயற்சி - நெஞ்சை உறைய வைக்கும் சிசிடிவி காட்சி

இரவு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளி தலையில் கல்லை போட்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய சைக்கோ இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

திருச்சி ஒத்தக்கடையில் உள்ள வணிக வளாகத்தில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த செந்தில்குமார் என்பவர் கடந்த 3 ஆம் தேதி இரவு தலையில் கல்லால் அடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனும‌திக்கப்பட்டார். அவரது செல்போன் மற்றும் பணம் திருடப்பட்டிருந்தன. அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மர்ம நபர் ஒருவர் கல்லால் கடுமையாக தாக்கும் காட்சிகள் பதிவாகியிருந்தன. சமீப காலமாக சேலத்தில் தூங்கிகொண்டிருந்த 2 காவலாளிகள் சைக்கோ வாலிபரால் தாக்கப்பட்ட நிலையில், அதே சைக்கோ வாலிபர் தான் இந்த சம்பவத்திலும் ஈடுபட்டுள்ளாரோ என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்