தமிழ்நாடு

காலிகுடங்களுடன் மக்கள் சாலை மறியல் - முறையாக குடிநீர் கிடைக்க வலியுறுத்தி மறியல்

திருச்சி, மணப்பாறை அருகே முறையாக குடிநீர் கிடைக்க வலியுறுத்தி மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

திருச்சி, மணப்பாறை அருகே முறையாக குடிநீர் கிடைக்க வலியுறுத்தி மக்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொய்கைப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேல எருதி கவுண்டம்பட்டி, தொப்பம்பட்டி ஆகிய கிராமங்களில் முறையாக காவிரி குடிநீர் வருவதில்லை என்று கூறப்படுகிறது. பல இடங்களிலும் மின்மோட்டார் மூலம் காவிரி குடிநீரை உறிஞ்சி எடுத்து விடுவதால், காவிரி குடிநீர் குழாயில் நீர் வராத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் சிரமப்படுவதாகவும் குற்றம் சாட்டிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் மறியல் கைவிடப்பட்டது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்