தமிழ்நாடு

புதிய மின்மாற்றி பொருத்தம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மின்மாற்றி கோரி, பொதுமக்கள் இறுதி அஞ்சலி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, மின்மாற்றி கோரி, பொதுமக்கள் இறுதி அஞ்சலி போராட்டம் நடத்தியதை தொடர்ந்து புதிய மின்மாற்றி பொருத்தப்பட்டது. புதிய மின்மாற்றி வேண்டும் என்பது கூடத்திபட்டி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்நிலையில் இறுதி அஞ்சலி போராட்டம் குறித்து தகவலறிந்த மின்சார வாரிய அதிகாரிகள், நேற்று இரவு உடனடியாக மின் மாற்றி எடுத்து வந்து சம்மந்தப்பட்ட மின்கம்பத்தில் பொருத்தினர். இதையடுத்து இன்று காலை மின்மாற்றியில் மின்கம்பிகள் முழுவதுமாக இணைக்கப்பட்டு மின்மாற்றி செயல்பாட்டுக்கு வந்தது. முன்னதாக அதிகாரிகள் மின்மாற்றிக்கு பூஜை செய்து மின் இணைப்பை வழங்கினர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்