Trichy | Kathir Hospital | திருச்சியில் கதிர் மருத்துவமனை புதிய சிறப்பு பிரிவு தொடக்கம்
திருச்சியில் கதிர் மருத்துவமனை புதிய சிறப்பு பிரிவு தொடக்கம் திருச்சி உறையூர் சாலைரோட்டில் உள்ள கதிர் மருத்துவமனையின் புதிய பல்நோக்கு சிறப்பு பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. மருத்துவமனையின் புதிய பிரிவை அவனிதா பரத்குமார் திறந்து வைத்தார். அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ள இந்த மருத்துவமனையில், 24 மணி நேர விபத்து மற்றும் அவசர சிகிச்சை, தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய தீவிர சிகிச்சைப் பிரிவு, சிறுநீரக சுத்திகரிப்பு, குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், அதிநவீன கதிர்வீச்சுப் பரிசோதனை, அறுவை சிகிச்சை அரங்குகள், கருவுறுதல் சிகிச்சை மற்றும் இதய நாள சிகிச்சை உள்ளிட்ட வசதிகளும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.