தமிழ்நாடு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு- மதுரையில் 2 பேரை கைது செய்தது தனிப்படை

திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் மதுரையில் இரண்டு பேரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

தந்தி டிவி
திருச்சி நகைக் கடை கொள்ளை வழக்கில் மதுரையில் இரண்டு பேரை திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமயநல்லூரை சேர்ந்த மகேந்திரன், திருச்சி நகை கடை கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான முருகனின் கூட்டாளி என கூறப்படுகிறது. மகேந்திரன் மூலமாக மதுரையில் உள்ள நகைப்பட்டறை உரிமையாளர் ஒருவரிடம் ஒரு கிலோ தங்க நகைகள் விற்றதாக வந்த தகவலை அடுத்து, சமயபுரம் விரைந்த தனிப்படையினர் அவரை கைது செய்துள்ளனர். மகேந்திரன் அளித்த தகவலின் பேரில் நகையை வாங்கியவரையும் கைது செய்துள்ள தனிப்படை போலீசார், அவரிடம் இருந்த 900 கிராம் தங்க நகைகளை மீட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்