தமிழ்நாடு

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு-18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

நகை கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், தப்பியோடிய சுரேஷின் தாய் கனகவள்ளி ஆகிய இருவரும் 18ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தந்தி டிவி

வழக்கமான வாகனச் சோதனையில் சிக்காமல் தலையில் ஹெல்மேட் அணிந்து மணிகண்டனும் சுரேஷூம் இருசக்கர வாகனத்தில் செல்ல சிறிது தூரத்தில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் பாரத நேரு தலைமையிலான தனிப்படையினர் இருவரையும் மடக்கி பிடித்துள்ளனர். சுரேஷ் தப்பியோடிவிட, நகைப்பையுடன் மணிகண்டன் சிக்கியுள்ளான். தப்பியோடிய சுரேஷின் உறவினர்களை திருவாரூர் காவல்நிலைத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் தாய் கனகவள்ளியை திருச்சிக்கு அழைத்து வந்தனர்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் சுரேஷின் தாயார் கனகவள்ளி ஆகியோரை போலீசார் திருச்சி காஜாமலையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள திருச்சி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் வரும் 18 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டதால் மணிகண்டன் திருச்சி மத்திய சிறையிலும் கனகவள்ளி பெண்கள் தனி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்