தமிழ்நாடு

திருச்சி ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகள் - காளைகளுடன் மல்லுக்கட்டும் காளையர்கள்

திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டியில் உற்சாகமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 18ஆம் தேதி இந்த பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி புனித வியாகுல மாதா திடலில் நடைபெற்று வருகிறது.

பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் இந்த போட்டியில், சுமார் 600 காளைகள், 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

வாடி வாசலில் இருந்து காளை ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட, காளையர்கள் அதனுடன் மல்லுக்கட்டி விளையாடி வருகின்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கும், வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை