தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு : ஒரே நாளில் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் தம்பதி உயிரிழந்தனர்.

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வீட்டை சுத்தம் செய்தபோது மின்சாரம் தாக்கியதில் தம்பதி உயிரிழந்தனர். லால்குடியை அடுத்த தாரானூரை சேர்ந்த மகேந்திரன் - சந்தியா தம்பதியினருக்கு சந்தோஷ், சர்வேஷ் என 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். தம்பதியினர் இருவரும் கூலி வேலைக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய நிலையில் வீட்டின் சந்து பகுதியை சந்தியா சுத்தம் செய்துள்ளார். அப்போது மின் ஒயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக சந்தியாவை மின்சாரம் தாக்கியுள்ளது. இதனை கண்டு அவரை காப்பாற்ற முயன்ற கணவன் மகேந்திரனையும் மின்சாரம் தாக்கியது. இந்த சம்பவத்தில் தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அவர்களை காப்பாற்ற முயன்ற மகேந்திரனின் சகோதரர் சக்திவேல் படுகாயமடைந்தார். மின் விபத்தில் குழந்தைகள் பெற்றோரை இழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு