தமிழ்நாடு

தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட பெண் குழந்தை : அறிவிப்பு வெளியிட்ட திருச்சி மாவட்ட ஆட்சியர்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் படித்துறையில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது.

தந்தி டிவி

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே புள்ளம்பாடி வாய்க்கால் படித்துறையில் இருந்து பெண் குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. கடந்த 19ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தைக்கு பிரதிக்‌ஷா என பெயரிடப்பட்டு அரசின் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த குழந்தை அல்லது குழந்தையின் பெற்றோர் குறித்த விவரங்கள் தெரிந்தவர்கள், 21 நாட்களுக்குள், திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு அல்லது திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இல்லாவிட்டால் குழந்தையை சட்டப்படி தத்து கொடுக்க தடையில்லா சான்று வழங்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?