தொட்டியம் அருகே மணல் கொள்ளை - லாரி உரிமையாளர்கள் போராட்டம் அறிவிப்பு
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காவிரி ஆறு பகுதியில் நள்ளிரவில் நடைபெறும் சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி, லாரி உரிமையாளர்கள் மே 7 முதல் 3 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தினசரி பல லாரிகளில் மணல் கடத்தப்படுவதால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், விவசாயிகளுடன் இணைந்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது