தமிழ்நாடு

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நபர் யார்? - விசாரணை தொடக்கம்

திருச்சி பெல் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர், ஏற்கனவே வெறொரு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தந்தி டிவி

திருச்சி பெல் கூட்டுறவு வங்கியில், கடந்த 31ஆம் தேதி இரவு, 1 கோடியே 43 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கொள்ளை போனது. இதையடுத்து வங்கி ஊழியர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிரமாக விசாரித்தும், இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி இரவு, திருச்சி எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்ற ஒரு கொள்ளை முயற்சியின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதில் கொள்ளையன் வீட்டின் ஜன்னலை உடைத்து, கொள்ளையடிக்க முயன்று தோல்வி அடைந்தது, திரும்பி சென்றுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த நிலையில், புதூரில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர் தான், பெல் வங்கியிலும் கொள்ளையடித்து இருப்பாரோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே போலீசார் இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்