திருச்சி உள்ளிட்ட 5 விமான நிலையங்களில் காணொளி காட்சி வாயிலாக விரைவு குடியுரிமை வசதியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.அதன்படி திருச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு அமிர்தசரஸ் மற்றும் லக்னோ ஆகிய விமான நிலையங்களில் விரைவு குடியுரிமை வசதி மற்றும் நம்பகமான பயணத்திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். மேலும் 13 விமான நிலையங்களில் இந்த வசதி இருப்பதாக பெருமிதம் தெரவித்த அவர், இதன் மூலம் விமான நிலையத்தில் பயணிகள் வெகு நேரம் காத்திருக்கும் சூழல் இனி இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.