தமிழ்நாடு

அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தீபாவளி போனஸ் வழங்க தாமதமாவதாக கூறி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை என கூறி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வடபழனி பணிமனையில் ஆர்ப்பாட்டம் நடத்திய போக்குவரத்து கழக ஊழியர்கள், முன்கூட்டியே தீபாவளி போனஸ் மற்றும் முன்பணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

கடலூரில் தீபாவளி போனஸ் மற்றும் முன் பணத்தை உடனடியாக வழங்கக் கோரி, கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்ற போராட்டத்தில் தொமுச, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கோவையில் உள்ள பணிமனைகள் முன்பு கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழாக்கால சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவிடும் அரசு, போனஸ் தொகையை உடனடியாக கொடுக்க நடவடிக்கை எடுப்பதில்லை என குற்றம் சாட்டினர். சென்னை திருவொற்றியூரில் பேருந்துகளை நிறுத்தி மாநகர போக்குவரத்து ஊழியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போனஸ் தொகை வழங்காத தமிழக அரசிற்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை