இந்தோனேசியாவில் உலக திருநங்கைகளுக்கான அழகிப் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த பிராசி என்பவர் பங்கேற்று 3வது இடத்தை பிடித்தார். சென்னை திரும்பிய திருநங்கை பிராசிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்திய திருநங்கைகள் அதிக திறமைகள் உள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.