டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் திருட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே டிரான்ஸ்பார்மரை உடைத்து காப்பர் கம்பிகள் மற்றும் ஆயிலை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். குந்துமாரனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட போத்தசந்திரம் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.