தமிழ்நாடு

குரூப்-1 மெயின் தேர்வர்களுக்கு மனிதநேயம் கல்வியகத்தில் பயிற்சி

தந்தி டிவி

குரூப்-1 மெயின் தேர்வர்களுக்கு மனிதநேயம் கல்வியகத்தில் பயிற்சி

சென்னையில் இயங்கி வரும் சைதை துரைசாமியின் மனிநேயம் IAS கட்டணமில்லா கல்வியகத்தில், TNPSC குரூப் 1- முதன்மைத் தேர்வு எழுதுபவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

TNPSC குரூப் 1 முதல்நிலைத் தேர்வில், மனிதநேயம் கட்டணமில்லா கல்வியத்தில் பயின்ற 37 மாணவிகள், 30 மாணவர்கள் என 67 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முதன்மைத் தேர்வு எழுத ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மனிதநேய மாணவர்கள் மட்டுமன்றி, இதர மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்காக, நேரில் வந்து பதிவு செய்ய முடியாதவர்கள், இணையதளம் மூலம் பதிவு செய்யவும், மாணவர்கள் வீட்டிலிருந்தே பயிற்சி பெற காணொளி வகுப்புகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மனிதநேய அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி வெளியிட்டுள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"