தமிழ்நாடு

Train Incident | ரயில் சக்கரங்களுக்கு இடையே சிக்கிய பெண் | கடவுளாக வந்த CRPF வீரர்

தந்தி டிவி

ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் - காப்பாற்றிய CRPF வீரர்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரயிலுக்கும், தண்டவாளத்திற்கும் இடையில் விழுந்த பெண்ணை, ரயில்வே பாதுகாப்புப் படை வீரர், கண் இமைக்கும் நேரத்தில் காப்பாற்றினார்.

விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியைச் சேர்ந்த பிரமிளா, தனது இரண்டு குழந்தைகளுடன் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் ரயிலில் ஏற முயன்றபோது, ரயிலுக்கும், தண்டவாளத்துக்கும் இடையே தவறி விழுந்தார்.

உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த CRPF வீரர் தயாநிதி, விசிலை ஊதி ரயிலை நிறுத்தினார். இதனால் ரயிலின் சக்கரங்களுக்கு இடையில் சிக்கிய பிரமிளா மீட்கப்பட்டார்.

துரிதமாக செயல்பட்டு பெண்ணை காப்பாற்றிய CRPF வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு