போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை குறைக்க முதலமைச்சர் பழனிசாமி நடவடிக்கை எடுக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தினசரி டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுவதை மூன்று மாதத்திற்கு ஒருமுறை என மாற்ற வேண்டும், சுங்க கட்டண உயர்வை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 8 தீர்மானங்கள் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.