தமிழ்நாடு

போக்குவரத்து விதிமீறல் - அபராத ரசீது தமிழில் இல்லை என சர்ச்சை

தமிழகத்தில் போக்குவரத்து விதிமீறலுக்கு வழங்கப்படும் அபராத தொகை ரசீது தமிழில் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தின்படி, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அபராத ரசீது, பிற மாநிலங்களில் மாநில மொழி மற்றும் ஆங்கிலத்தில், வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் ரசீது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் ரசீது தமிழில் வழங்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் இத்தகைய ரசீது இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்