தமிழ்நாடு

நாளை மாலை கரையை கடக்கிறது, 'கஜா புயல்'

கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தந்தி டிவி

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 640 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 6 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வரும் 'கஜா' புயல், நாளை மாலை கடலூர், பாம்பன் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, தமிழ்நாட்டின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, கடலூர், நாகை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காற்றானது, 70 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி, மெதுவாக அதிகரித்து 110 கிலோ மீட்டரை எட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"