தமிழ்நாடு

நாளை மாலை கரையை கடக்கிறது, 'கஜா புயல்'

கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது .

தந்தி டிவி

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல், இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, சென்னையில் இருந்து 540 கிலோ மீட்டர் தொலைவிலும், நாகையில் இருந்து 640 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. 6 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக நகர்ந்து வரும் 'கஜா' புயல், நாளை மாலை கடலூர், பாம்பன் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக, தமிழ்நாட்டின் வடக்கு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மாலையில் இருந்து மழை பெய்யத் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, கடலூர், நாகை, தூத்துக்குடி, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 20 சென்டி மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் எனவும் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காற்றானது, 70 கிலோ மீட்டர் வேகத்தில் தொடங்கி, மெதுவாக அதிகரித்து 110 கிலோ மீட்டரை எட்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?