மத்திய அரசு போட்ட உத்தரவு.. தடுத்து நிறுத்தப்பட்ட பேருந்துகள்.. பரபரப்பை கிளப்பிய சம்பவம்
மதுரை–ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் உள்ள திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில், FASTag இல்லாத அரசுப் பேருந்துகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மத்திய அரசின் உத்தரவுப்படி இன்று முதல் டிஜிட்டல் கட்டணம் மட்டுமே ஏற்கப்படும் நிலையில், FASTag இல்லாத பேருந்துகள் UPI மூலம் பணம் செலுத்திய பிறகே அனுமதிக்கப்பட்டன