• நாமக்கல் கிட்னி திருட்டு வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது... காவல்துறை அதிகாரிகள் தொடர்பான உயர்நீதிமன்ற கருத்துகளை உச்சநீதிமன்றம் நீக்கியது....
• கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது உச்சநீதிமன்றம் விசாரணை.... உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க தமிழக வெற்றிக் கழக தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்....
• ரோடு ஷோக்களை நெறிப்படுத்தும் விவகாரத்தில் எப்படி ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.... காவல்துறை சார்ந்த வழக்குகள் கிரிமினல் ரிட் மனுக்களாக பதிவு செய்யப்படுகிறது என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்தது....
• கர்நாடகாவின் மேகதாது அணைக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது... தீபாவளி விடுமுறைக்கு பிறகு மனுவை விசாரிக்க ஒப்புதல் தெரிவித்துள்ளது....
• முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டி தேர்வை தள்ளி வைக்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது..... தேர்வை தள்ளிவைக்க கோரிய மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது...
• நெல்லை மாவட்டம் திடியூரில் உள்ள தனியார் கல்லூரியில் 8 மாணவர்களுக்கு எலிகாய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது....மறு உத்தரவு வரும் வரை கல்லூரியை மூட மாவட்ட சுகாதாரத்துறை ஆணையிட்டுள்ளது....