தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 30,016 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 486 பேர் கொரோனாவுக்கு பலி

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.

தந்தி டிவி

தமிழகத்தில் புதிதாக 30 ஆயிரத்து 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 39 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 486 பேர் தமிழகத்தில் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 261 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 31 ஆயிரத்து 759 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 157 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி

Breaking | Gold Rate | 1 லட்சத்துக்கும் கீழ் குறையுமா? | இப்பவே வாங்கலாமா வெயிட் பண்ணலாமா?

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்