பெண் காவலர்களை பணியமர்த்துவதில் கட்டுப்பாடுகள் விதிப்பு
பாலியல் புகார் எதிரொலியாக பெண் காவலர்களை பணியமர்த்துவதில் கட்டுப்பாடுகள் விதித்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, காவல் அதிகாரிகளின் அலுவலகம், முகாம் அலுவலகத்தில் பெண் போலீசாரை பணியமர்த்தக் கூடாது என டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். இது எஸ்பிகளில் இருந்து ஐஜி வரை உள்ள அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பாலியல் விவகாரத்தில் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் பெண் காவலர்களை பணியமர்த்துவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.