தமிழ்நாடு

குரூப்4 தேர்வில் முறைகேடு என புகார் - உரிய விசாரணை நடத்த அரசுக்கு கோரிக்கை

டி.என்.பி.எஸ்.சி குரூப்4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

டி.என்.பி.எஸ்.சி குரூப் - 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற குரூப் - 4 தேர்வினை 5 ஆயிரத்து 575 மையங்களில், சுமார் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் தேர்வெழுதியவர்களே முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. சமூக இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் இந்த 2 மையங்களில் தேர்வு எழுதியவர்களே முன்னிலை பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது. எனவே, அந்த மையங்களில் முறைகேடு நடைபெற்றதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள மாணவர்கள், இதுகுறித்து விசாரிக்க வேண்டுமென, அரசுக்கு கோரிக்கை எழுந்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்