டி.என்.பி.எஸ்.சி முறைகேடு புகாரில் சிக்கியுள்ள இடைத்தரகர் ஜெயக்குமார், 2012ம் ஆண்டில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்பி முறைகேட்டிலும் தொடர்புடையவர் என, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 2012ம் ஆண்டில் நடைபெற்ற குரூப் -2 முறைகேட்டில் சிக்கி சிறையில் உள்ள தவமணியின் வழக்கறிஞர்கள், இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ஏற்கனவே சிக்கிய ஜெயக்குமார், தவமணி உள்ளிட்ட, 30 பேர் மீது, சிபிசிஐடி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.