தமிழ்நாடு

``போலீசுக்கே கொலைமிரட்டல்... எந்த நடவடிக்கையும் இல்லை..'' அதிர்வுகளை கிளப்பிய ராஜினாமா கடிதம்

தந்தி டிவி

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணி புரியும் பிரபாகரன் என்பவர், காவல்துறை தலைவருக்கு எழுதிய ராஜினாமா கடிதம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. ரோந்து பணியில் ஈடுபட்ட போது உரிய ஆவணங்கள் இன்றி டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில்

எம்-சாண்ட் மணல் மற்றும் ஜல்லி கடத்தலில் ஈடுபட்ட நபர்களை வழிமறித்து விசாரித்த போது, மிரட்டும் பாணியில் பேசி அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாக அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். தன்னை மிரட்டியது பற்றிய வீடியோ ஆதாரங்களை காவல் ஆய்வாளர் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எனவே

தமிழக காவல்துறையில் பணிபுரிவது அச்சத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். காவலர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தாலும், அதன் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காததால். முதல் நிலைக் காவலர் பணியில் இருந்து விடுவிக்க கோரி டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை