தமிழகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 352 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 15 ஆயிரத்து 590 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று சுமார் 78 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மேலும் 6 ஆயிரத்து 45 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆயிரத்து 137 ஆக உயர்ந்து இருக்கிறது. 52 ஆயிரத்து 726 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.