எஸ்ஐஆா் பணிகளை கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், குஜராத், கேரளம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு அடுத்த இரண்டு தினங்களில் பார்வையாளர் வர உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. பிப்ரவரி மாதம் வரை அந்த மாநிலங்களில் தங்கி தகுதியற்ற வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதையும், இறுதி பட்டியலை உறுதி செய்யும் பணிகளை தேர்தல் பார்வையாளர்கள் மேற்கொள்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.