தமிழ்நாடு

சர்வதேச கராத்தே போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் - சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.

தந்தி டிவி
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஷிமோகாவில் கடந்த 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் இந்தியா, மலேசியா, பங்களாதேஷ் உள்பட 5 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த போட்டித் தொடரில் தமிழக வீரர், வீராங்கனைகள் 16 தங்கம், 15 வெள்ளி உட்பட 42 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 2-ஆம் இடத்தை பிடித்தனர். இதனையடுத்து இன்று ரயில் மூலம் சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு ஆவடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் கராத்தே போட்டியை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு