தமிழ்நாடு

சர்வதேச கராத்தே போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் - சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது.

தந்தி டிவி
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-ஆம் இடம் பிடித்து அசத்தியுள்ளது. ஷிமோகாவில் கடந்த 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் இந்தியா, மலேசியா, பங்களாதேஷ் உள்பட 5 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இந்த போட்டித் தொடரில் தமிழக வீரர், வீராங்கனைகள் 16 தங்கம், 15 வெள்ளி உட்பட 42 பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக 2-ஆம் இடத்தை பிடித்தனர். இதனையடுத்து இன்று ரயில் மூலம் சென்னை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு ஆவடி மற்றும் பெரம்பூர் பகுதிகளில் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிலையில் கராத்தே போட்டியை ஊக்குவிக்க அரசு முன்வர வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்