தமிழ்நாடு

தலைமை செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு - உறுப்பினர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், சுகாதாரத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சட்டப்பேரவையின் நுழைவு வாயில் உள்ளிட்ட நான்கு இடங்களில் சுகாதாரத் துறை பணியாளர்கள் குழுவாக நின்று கொண்டு, பேரவை உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதனிடையே, திமுக எம்.எல்.ஏ. சரவணன், முக கவசம் அணிந்தபடி சட்டப்பேரவைக்கு வந்தார். சுகாதார பணியாளர்கள் வழங்கிய துண்டு பிரசுரத்தை பெற்றுக் கொண்ட அவர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வரவேற்பு தெரிவித்தார்.

-

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி