தமிழ்நாடு

தலைமை செயலகத்தில் கொரோனா விழிப்புணர்வு - உறுப்பினர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வினியோகம்

கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

கொரோனா குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், சுகாதாரத்துறை சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, சட்டப்பேரவையின் நுழைவு வாயில் உள்ளிட்ட நான்கு இடங்களில் சுகாதாரத் துறை பணியாளர்கள் குழுவாக நின்று கொண்டு, பேரவை உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதனிடையே, திமுக எம்.எல்.ஏ. சரவணன், முக கவசம் அணிந்தபடி சட்டப்பேரவைக்கு வந்தார். சுகாதார பணியாளர்கள் வழங்கிய துண்டு பிரசுரத்தை பெற்றுக் கொண்ட அவர், இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வரவேற்பு தெரிவித்தார்.

-

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா