தமிழ்நாடு

அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க ரூ.604 கோடி ஒதுக்கீடு : அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க, 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
சர்க்கரை அட்டையிலிருந்து அரிசி அட்டைக்கு மாறிய பயனாளிகளுக்கு கூடுதலாக அரிசி வழங்க, 604 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 10 லட்சத்து 19 ஆயிரம் சர்க்கரை அட்டைதாரர்கள், அரிசி அட்டையாக மாற்றிக் கொள்ள தமிழக அரசு நவம்பர் 19 முதல் 29ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியது. இதைப் பயன்படுத்தி 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள், அரிசி அட்டையாக மாற்றிக்கொள்ள விண்ணப்பித்தனர். புதிதாக அரிசி அட்டைக்கு மாறிய அந்த பயனாளிகளுக்கு 20 ஆயிரத்து 389 டன் அரிசி கூடுதலாக வழங்க வேண்டும். இதற்காக ஒவ்வொரு மாதமும் 50 கோடி ரூபாய் வீதம், ஆண்டுக்கு 604 கோடி ரூபாய் நிதியை, தமிழக அரசு ஒதுக்கி உள்ளதாக, அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?