தமிழ்நாடு

காணாமல் போன மீனவர்கள் குறித்து அறிக்கை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக எவ்வளவு மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

ராமநாதபுரம் சேர்ந்த மல்லிகா என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2005ஆம் ஆண்டு தமது கணவர் மீன் பிடிக்க சென்ற போது கடலில் விழுந்து காணாமல் போய்விட்டதாகவும், கணவரின் உடல் மீட்கப்படாததால், அவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்க அதிகாரிகள் மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இறப்பு சான்றிதழ் இல்லாமல் இழப்பீடும் பெற முடியாது என்பதால், நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் மல்லிகா கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன் கடந்த 13 ஆண்டுகளாக காணாமல் போனவர்கள் தொடர்பாக எவ்வளவு மனுக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன? என்பது குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு