தமிழகம் முழுக்க அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்ட தேர்தல் அலுவலர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அதிகாரிகளுக்கான தேர்தல் காலப் பணிகள் குறித்து அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க , ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 9 பறக்கும் படைகள் மற்றும் 9 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டத்தில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் போலீசாரைப் பணியமர்த்த காவல்துறை தயார் நிலையில் உள்ளது.