இந்து மதத்தின் அடிப்படையே வேதம் என்றும்,அது தெய்வீகம் நிறைந்தது என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் ராம்கோ நிறுவனத்தின் சார்பில் வேதம் பயிலும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அவர், வேதம் இலக்கியம் என்பது கடல் போன்றது என்றும், அதனை கற்பது அவ்வளவு எளிதானது அல்ல என கூறினார். கற்கும் வேதத்தை சிரத்தையுடன் கற்று பாதுகாக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.