"குடிசை இல்லா தமிழகம் உருவாக்கப்படும்"
முன்னதாக, வேலூர் மக்களவை தொகுதிகுக்கு உட்பட்ட ஒடுக்கத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், இன்னும் 4 ஆண்டுகளுக்குள் குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என உறுதி அளித்தார். ஜெயலலிதா கனவுப்படி 2023ம் ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்படும் என்றார். மேலும், புண்ணிய பூமியான தஞ்சையில் விளைந்தால்தான் சோறு என்ற நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசாணையில், திமுக பெற்றுத் தராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.