கட்சி பாகுபாடு இன்றி அனைத்து தரப்பினரும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை வரும் செவ்வாய் கிழமை சென்று பார்வையிட உள்ளதாகவும் தெரிவித்தார்.