தமிழ்நாடு

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற 3 தமிழக வீரர்களுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகை - தமிழக முதலமைச்சர்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெண்கல பதக்கம் வென்ற 3 பேருக்கு தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்து முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகரில் நடைபெற்று வரும் 18-வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஸ்குவாஷ் மகளிர் ஒன்றையர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் தீபிகா கார்த்திக் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளனர். இதேபோல் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் சவுரவ் கோஷல் வெண்கல பதக்கம் வென்றுள்ளார். அனைவருக்கும் தலா 20 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அறிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, பாராட்டு தெரிவித்து தனித்தனியாக கடிதமும் எழுதியுள்ளார். வெண்கல பதக்கம் வென்ற 3 பேருக்கும் தமிழக அரசின் சார்பில் பாராட்டு தெரிவித்து கொள்வதாகவும் அதில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்