தமிழ்நாடு

தொடர்ந்து 3.17 மணி நேரம் பட்ஜெட் வாசித்து ஓ.பி.எஸ். சாதனை

சட்டப் பேரவையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை வாசித்தார்.

தந்தி டிவி

சட்டப் பேரவையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பட்ஜெட் உரை வாசித்தார். தமிழக சட்டப் பேரவை இன்று கூடியவுடன் 10 மணிக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 127 பக்கம் கொண்ட பட்ஜெட்டில், நன்றி வாசிப்பு வரை 113 பக்கத்தை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்து முடித்தார். காலை 10 மணிக்கு தொடங்கி உரை வாசிப்பு தொடர்ந்து நண்பகல் 1 மணி 17 நிமிடம் வரை இடைநில்லாமல் வாசித்தார். அதாவது, மொத்தம் 3 மணி நேரம் 17 நிமிடம் தொடர் உரை வாசிப்பை அவர் நிகழ்த்தியுள்ளார். இது நாடாளுமன்றத்தில் தாக்கலான மத்திய பட்ஜெட் வாசிப்பு நேரத்தைவிட அதிகம்.

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS