தமிழ்நாடு

தொடர்ந்து 3.17 மணி நேரம் பட்ஜெட் வாசித்து ஓ.பி.எஸ். சாதனை

சட்டப் பேரவையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை வாசித்தார்.

தந்தி டிவி

சட்டப் பேரவையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பட்ஜெட் உரை வாசித்தார். தமிழக சட்டப் பேரவை இன்று கூடியவுடன் 10 மணிக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 127 பக்கம் கொண்ட பட்ஜெட்டில், நன்றி வாசிப்பு வரை 113 பக்கத்தை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்து முடித்தார். காலை 10 மணிக்கு தொடங்கி உரை வாசிப்பு தொடர்ந்து நண்பகல் 1 மணி 17 நிமிடம் வரை இடைநில்லாமல் வாசித்தார். அதாவது, மொத்தம் 3 மணி நேரம் 17 நிமிடம் தொடர் உரை வாசிப்பை அவர் நிகழ்த்தியுள்ளார். இது நாடாளுமன்றத்தில் தாக்கலான மத்திய பட்ஜெட் வாசிப்பு நேரத்தைவிட அதிகம்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு