தமிழ்நாடு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தந்தி டிவி

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்ய சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்றும், பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளை சிறந்த முறையில் பராமரிக்க, வளர்ப்பு பெற்றோர்களுக்கு 2 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக, நிதி உயர்த்தி வழங்கப்படும் எனவும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள பெண்கள், 21 வயது பூர்த்தியாகும்போது, அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பெண் சிசுக் கொலையை குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்