தமிழ்நாடு

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சரின் அறிவிப்புகள்

பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தந்தி டிவி

ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கொண்டாடப்படும் என தெரிவித்தார்.பெற்றோர் மற்றும் பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு உதவி செய்ய சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்றும், பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகளை சிறந்த முறையில் பராமரிக்க, வளர்ப்பு பெற்றோர்களுக்கு 2 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரமாக, நிதி உயர்த்தி வழங்கப்படும் எனவும் ஆதரவற்றோர் இல்லங்களில் உள்ள பெண்கள், 21 வயது பூர்த்தியாகும்போது, அவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பெண் சிசுக் கொலையை குறைக்கும் வகையில் சிறப்பாக செயல்படும் முதல் மூன்று மாவட்டங்களுக்கு தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கப்படும் என்றும், முதலமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டார்.

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி