தமிழ்நாடு

செல்போன் திருடிய மூவர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் எர்ணாவூர் பகுதியிலிருந்து பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் உடன் பயணித்த 3 பேர் அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து ராஜீவ்காந்தி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவின் உதவியால் அந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், தனசேகரன், மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு