தமிழ்நாடு

செல்போன் திருடிய மூவர் கைது

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

திருவொற்றியூரில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த ராஜீவ்காந்தி என்பவர் எர்ணாவூர் பகுதியிலிருந்து பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த போது ஆட்டோவில் உடன் பயணித்த 3 பேர் அவரிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர். இதுகுறித்து ராஜீவ்காந்தி திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமராவின் உதவியால் அந்த 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஹரன், தனசேகரன், மற்றும் திருவொற்றியூரை சேர்ந்த சுரேந்தர் என்பது தெரியவந்துள்ளது.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்