தமிழ்நாடு

Tiruvarur Latest News | Robbery | பல குடும்பங்களை கதறவைத்து ஆள்காட்டி விரலால் சிக்கிய `அரக்கன்’

தந்தி டிவி

ஆள்காட்டி விரல் அடையாளத்தை வைத்து திருடன் கைது திருவாரூர் மாவட்டம் ராகவேந்திரா நகரில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகை திருடப்பட்ட விவகாரத்தில், ரங்க ராட்டினம் அமைக்கும் தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் சுமார் 400 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், திருட்டில் ஈடுபட்ட நபரின் ஆள்காட்டி விரல் நீளமாக இருப்பதை வைத்து, அவர் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைதான பிரபு என்பதை கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து சேலத்தில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் நடந்த விசாரணையில், தான் ரங்கராட்டினம் அமைக்கும் ஊர்களில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு,நகைகளை திருடுவேன் என அவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவரிடம் இருந்த 22 சவரன் தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு