தமிழ்நாடு

வெறிநாய் கடித்து 20 பேர் காயம் : வெறிநாயை பிடிக்க ஊழியர்கள் தீவிரம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் பெருக வாழ்ந்தானை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, வழியில் காண்போரையெல்லாம் எல்லாம் கடித்துக் குதறியுள்ளது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் பெருக வாழ்ந்தானை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, வழியில் காண்போரையெல்லாம் எல்லாம் கடித்துக் குதறியுள்ளது. இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். வெறிநாய் கடித்தவர்கள் ஒருவர் பின், ஒருவராக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது தான் இந்த விவரம் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடியிலிருந்து 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டு, வெறிநாய் கடித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மேலும் வெறி நாயைப் பிடிப்பதற்கு, உள்ளாட்சி பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வெறிநாய் பிடிபடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்