தமிழ்நாடு

வெறிநாய் கடித்து 20 பேர் காயம் : வெறிநாயை பிடிக்க ஊழியர்கள் தீவிரம்

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் பெருக வாழ்ந்தானை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, வழியில் காண்போரையெல்லாம் எல்லாம் கடித்துக் குதறியுள்ளது.

தந்தி டிவி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை மற்றும் பெருக வாழ்ந்தானை சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று, வழியில் காண்போரையெல்லாம் எல்லாம் கடித்துக் குதறியுள்ளது. இதில் 20 பேர் காயமடைந்துள்ளனர். வெறிநாய் கடித்தவர்கள் ஒருவர் பின், ஒருவராக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போது தான் இந்த விவரம் தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடியிலிருந்து 108 ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்பட்டு, வெறிநாய் கடித்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். மேலும் வெறி நாயைப் பிடிப்பதற்கு, உள்ளாட்சி பணியாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். வெறிநாய் பிடிபடவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்