தமிழ்நாடு

பழுது பார்க்கும்போது பாய்ந்த மின்சாரம்.. ஊழியர் மின் கம்பத்திலிருந்து தூக்கி வீசப்பட்ட அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி

திருவண்ணாமலையில், மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காமாட்சியம்மன் கோயில் தெருவில் மின் விநியோகத்தை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கிக்கொண்டிருந்த முனியப்பன் என்ற ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கியதில் கீழே விழுந்தார்.

பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். தற்போது அவர் மின்கம்பத்திலிருந்து விழும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை