தமிழ்நாடு

11 ஆண்டு காதல்; 2 ஆண்டுக்கு முன் கல்யாணம்... அடுத்து இறங்கிய பேரிடி... ஊரையே ஸ்தம்பிக்க வைத்த பெண்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே இரண்டாவது திருமணத்திற்கு தயாரான கணவரை கைது செய்யக்கோரி முதல் மனைவியின் குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.வந்தவாசி அடுத்த கெழங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரும் பெங்களூரை சேர்ந்த ஜெயந்தி என்ற பெண்ணும் கடந்த 11 ஆண்டுகளாக காதலித்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளனர். இது பிரபாகரனின் குடும்பத்தினருக்கு தெரியாது. இந்நிலையில், பிரபாகரன் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருகிறார். இதுகுறித்து தேசூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது... உரிய நடவடிக்கை இல்லை... எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது... உரிய நடவடிக்கை இல்லை... இதனையடுத்து, வந்தவாசி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஜெயந்தியின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அங்கேயும் காலை முதல் இரவு வரை உரிய நடவடிக்கை எடுக்காமல் இழுத்தடித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஜெயந்தியின் குடும்பத்தினர், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்