தமிழ்நாடு

மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டவர் பலி - அனுமதியின்றி டிரெக்கிங் சென்றதாக தகவல்

திருவண்ணாமலை அருகே டிரெக்கிங் சென்ற வங்கி மேலாளர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது 12 பேர், அனுமதியின்றி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. டிரெக்கிங் அகாடமியை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவரின் தலைமையில் இவர்கள் கந்தாஸ்ரமம் வரை மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த குழுவில் இருந்த வங்கி மேலாளரான ஆனந்த் ராஜ் என்பவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரின் சடலத்தை அவர்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் மீட்டனர். மேலும் டிரெக்கிங் அகாடமியை சேர்ந்த விஜயானந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை