தமிழ்நாடு

மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டவர் பலி - அனுமதியின்றி டிரெக்கிங் சென்றதாக தகவல்

திருவண்ணாமலை அருகே டிரெக்கிங் சென்ற வங்கி மேலாளர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையின் மீது 12 பேர், அனுமதியின்றி மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. டிரெக்கிங் அகாடமியை சேர்ந்த விஜய் ஆனந்த் என்பவரின் தலைமையில் இவர்கள் கந்தாஸ்ரமம் வரை மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த குழுவில் இருந்த வங்கி மேலாளரான ஆனந்த் ராஜ் என்பவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. திடீரென அவர் மயங்கி விழுந்து உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரின் சடலத்தை அவர்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் மீட்டனர். மேலும் டிரெக்கிங் அகாடமியை சேர்ந்த விஜயானந்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி