தமிழ்நாடு

திருவண்ணாமலையில் கனமழை - மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மழையின் காரணமாக மண் சுவர் வீடுகள் இடிந்து விழும் ஆபத்து உள்ளதால் அங்கு வசிப்பர்கள் தற்காலிக முகாம்களுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். மழை பாதிப்புக்களை உடனுக்குடன் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் வகையில் தனி கட்டுபாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் மற்றும் பாதிப்புகள் குறித்து உடனடியாக புகார் தெரிவிக்க 1077 என்ற இலவச கட்டுப்பாட்டு எண்ணை பொது மக்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை