தமிழ்நாடு

நண்பர்களோடு பேசும்போதே வானிலிருந்து தலையில் இறங்கிய ஒளி...அப்படியே நின்ற மூச்சு - கதறும் மனைவி

தந்தி டிவி

நண்பர்களோடு பேசும்போதே வானிலிருந்து தலையில் இறங்கிய ஒளி...அப்படியே நின்ற மூச்சு - "என் செல்லமே.. தங்கமே.."கதறும் மனைவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி கிராமம் வடவாண்டை தெருவைச் சேர்ந்த 34 வயது விவசாயி ராஜசேகரன் கிராமத்தில் உள்ள குளக்கரையிடம் நண்பர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென லேசான மழை வந்துள்ளது... மரத்தடியில் ஒதுங்கிய போது ராஜசேகரன் மீது மின்னல் தாக்கிய நிலையில் மயக்கமடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்... உடனிருந்தவர்கள் காயங்களுடன் உயிர் பிழைத்தனர்... குழந்தைகளும் இல்லாத நிலையில் கணவரை இழந்து விட்டு தனிமரமாய் வாடுகிறார் ராஜசேகரனின் மனைவி காமாட்சி... மகனை இழந்து பரிதவிக்கிறார் தாய்.... மழை பெய்து கொண்டிருக்கும்போது திறந்தவெளியில் நின்று கொண்டு செல்போன் பேசியதால் மின்னல் தாக்கி பரிதாபமாய் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?