தமிழ்நாடு

நண்பர்களோடு பேசும்போதே வானிலிருந்து தலையில் இறங்கிய ஒளி...அப்படியே நின்ற மூச்சு - கதறும் மனைவி

தந்தி டிவி

நண்பர்களோடு பேசும்போதே வானிலிருந்து தலையில் இறங்கிய ஒளி...அப்படியே நின்ற மூச்சு - "என் செல்லமே.. தங்கமே.."கதறும் மனைவி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே செல்போனில் பேசிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி விவசாயி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

வெம்பாக்கம் தாலுகா அழிவிடைதாங்கி கிராமம் வடவாண்டை தெருவைச் சேர்ந்த 34 வயது விவசாயி ராஜசேகரன் கிராமத்தில் உள்ள குளக்கரையிடம் நண்பர்களுடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென லேசான மழை வந்துள்ளது... மரத்தடியில் ஒதுங்கிய போது ராஜசேகரன் மீது மின்னல் தாக்கிய நிலையில் மயக்கமடைந்த அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்... உடனிருந்தவர்கள் காயங்களுடன் உயிர் பிழைத்தனர்... குழந்தைகளும் இல்லாத நிலையில் கணவரை இழந்து விட்டு தனிமரமாய் வாடுகிறார் ராஜசேகரனின் மனைவி காமாட்சி... மகனை இழந்து பரிதவிக்கிறார் தாய்.... மழை பெய்து கொண்டிருக்கும்போது திறந்தவெளியில் நின்று கொண்டு செல்போன் பேசியதால் மின்னல் தாக்கி பரிதாபமாய் ஒரு உயிர் பறிபோன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை