தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய துணிந்த சிறுவன் - தி.மலையில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவண்ணாமலையில், நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் இவரது நண்பர் அருண்குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மணிகண்டனை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய அருண்குமார் முடிவு செய்துள்ளார். இதற்காக அருண்குமார், தினேஷ், தீபன் மற்றும் ஒரு சிறுவன் என நான்குபேரும் ஒன்று கூடி, மணிகண்டன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் மணிகண்டன் சிறு காயங்களுடன் தப்பித்தார். இந்நிலையில், 4 பேரையும் கைது செய்த போலீசார், 3 பேரை வேலூர் சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு