தமிழ்நாடு

நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய துணிந்த சிறுவன் - தி.மலையில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவண்ணாமலையில், நாட்டு வெடிகுண்டு வீசி கொலை முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கும் இவரது நண்பர் அருண்குமார் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், மணிகண்டனை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய அருண்குமார் முடிவு செய்துள்ளார். இதற்காக அருண்குமார், தினேஷ், தீபன் மற்றும் ஒரு சிறுவன் என நான்குபேரும் ஒன்று கூடி, மணிகண்டன் மீது நாட்டு வெடிகுண்டு வீசியுள்ளனர். இதில் மணிகண்டன் சிறு காயங்களுடன் தப்பித்தார். இந்நிலையில், 4 பேரையும் கைது செய்த போலீசார், 3 பேரை வேலூர் சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே