தமிழ்நாடு

"7.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு போராடி பெற்றது" - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சு

தமிழக அரசு போராடி கொண்டு வந்த 7புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் தற்போது மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் 622 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் நந்தூரி தமிழக அரசு போராடி கொண்டு வந்த 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் தற்போது மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 8 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்து வருவதாகவும் அவர் கூறினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்