தமிழ்நாடு

"7.5% இடஒதுக்கீட்டை தமிழக அரசு போராடி பெற்றது" - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேச்சு

தமிழக அரசு போராடி கொண்டு வந்த 7புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் தற்போது மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியில் 622 அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களை பாராட்டி பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய சந்தீப் நந்தூரி தமிழக அரசு போராடி கொண்டு வந்த 7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் அரசு பள்ளி ஏழை மாணவர்கள் தற்போது மருத்துவம் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த ஆண்டு 8 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் மருத்துவம் படித்து வருவதாகவும் அவர் கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை